1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொஸ்கம மற்றும் கம்பஹாவில் இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகெவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நபரொருவர் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மாகெவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீண்ட நாட்களாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.

இதன்போது கூரிய ஆயுதத்தால் பெண் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனமலேவத்த பகுதியில் தகராறு நீண்டதில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் களுஹக்கல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையை செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி