வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் மீது குற்றவியல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்பின் மீது இவ்வாறு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் என்பவருடன் நெருக்கமாக இருந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்த விவரம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியது.
இதை மறைத்து, தங்கள் உறவு பற்றிய தகவல் வெளிவராமல் இருப்பதற்கு, அந்த நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் $130,000 கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிராக சாட்சியும், ஆதாரமும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.