1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவர் திடீரென

கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை தெற்கு சேனவிரத்ன பிளேஸைச் சேர்ந்த கஜநாயக்க முதலிகே நாலக துஷார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காணி ஒன்று தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் ருவன் விஜேசிங்க தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி