1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான விடுதியொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.



பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மதுபான விடுதியை நடத்தி வந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சோதனையின் போது, அதிக விலையுடைய ​​57 வகையான மதுபான போத்தல்கள், 119 பீர் ரின் மற்றும் 620 சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அங்கு கண்டெடுக்கப்பட்ட மதுபானத்தின் பெறுமதி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, அங்குள்ள மதுபான போத்தல்களில் இருந்து சட்டவிரோத மதுபானம் கலந்து விற்பனை செய்யும் மோசடியொன்று இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி