கந்தளாய், அக்போபுர பிரதேசத்தில் சேதமடைந்த புகையிரத பாதை 04 மணித்தியாலங்களில் மீளமைக்கப்படும் என புகையிரத
திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகலில் இருந்து குறித்த பாதையின் ஊடான புகையிரத சேவை வழமைக்கு திரும்பும் என புகையிரத திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கந்தளாயிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த 04 பெட்டிகள் கொண்ட புகையிரதம் நேற்று (07) பிற்பகல் தடம் புர
ண்டதன் காரணமாக விபத்துக்குள்ளானது. விபத்தில் 16 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.