எல்பிட்டிய, திவிதுரவத்த, எம்பிலிகந்த பகுதியில் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம்
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய, திவிதுரவத்தை பகுதியைச் சேர்ந்த சந்திர குமார சரத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நண்பர்கள் குழுவுடன் வீட்டை விட்டு வெளியேறி இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.