1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி பிரதேசத்திலுள்ள தனியார் காணி ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த

கைக்குண்டு ஒன்றை நேற்று (09) மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றிற்கு சொந்தமான விடுதிக்கு முன்னால் உள்ள காணியில் சம்பவதினமான நேற்று காலை விடுதி காவலாளி காணியில் வளர்ந்துள்ள புல்லுகளை வெட்டி துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நிலத்தில் புதையுண்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு பொலிசாருக்கு தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினரை வரவழைத்து குண்டை செயலிழக்கச் செய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி