தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு தேர்தலை நடத்துவது தேசிய தேவை அல்ல என பாகிஸ்தான் நிதியமைச்சர்
தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தலை நடத்த வேண்டும் என நாட்டின் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், நிதியமைச்சரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் பொருளாதார குழப்பங்களுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது அவசியம் அல்ல அந்நாட்டின் நிதியமைச்சர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக அரசியலமைப்பு நெருக்கடி கூட உருவாகும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.