மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரிகம பொது வர்த்தக நிலையத்திற்கு வியாபாரத்திற்காக வந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு
காரணமாக கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக்கொலை நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயம் அடைந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையை செய்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.