டொரிங்டனில் உள்ள ரக்பி ஒன்றிய தலைமையகம் விளையாட்டு அமைச்சக அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆம் திகதி இலங்கை ரக்பி ஒன்றியம் கலைக்கப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஸ்திரப்படுத்தல் குழுவொன்று நியமிக்கப்பட்ட காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அமைச்சின் அதிகாரிகள் தமக்கு அறிவிக்காமல் சீல் வைத்துள்ளதாக ரக்பி ஒன்றிய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.