லொறி ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை, ஓனேகம வீதியின் வலேகடே சந்தியில் இன்று (15) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது உழவு இயந்திரத்தில் சுமார் 10 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.