1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

காலி, தடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

தடல்ல பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பின்னர் இரவு வேளையில் இடம்பெற்ற டீஜே இசையை பார்த்துக் கொண்டிருந்தவர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இரண்டு சந்தேகநபர்கள் வந்துள்ளதாகவும், சட்டவிரோத மதுபான வியாபாரம் தொடர்பாக உயிரிழந்தவருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த பகைமையினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் உயிரிழந்தவரின் உறவினர் என்பதுடன் துப்பாக்கிச் சூட்டுக்கு ​கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி