ருவன்வெல்ல, மாபிடிகம பிரதேசத்தில் மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று (15) பிற்பகல் களனி கங்கையில் நீராடச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுவர்கள் குழுவொன்று மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று சிறுவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ருவன்வெல்ல, கோனகல பிரதேசத்தில் வசிக்கும் சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.