கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனையில் பொது ஆர்ப்பாட்டத்தின் போது ஒருவர்
பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் இறுதிப் பரிந்துரை நேற்று (18) பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பல்துறை அணுகுமுறை கொண்ட நிபுணர்கள் குழுவின் பங்களிப்புடன் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.