முன்னாள் சட்டமா அதிபர் தப்புல த லிவேரா ஒரு சாட்சியாக இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கர்தினால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் இருண்ட நாட்களில் ஒன்றாகக் குறிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு அன்று 272 உயிர்களைப் பலிகொண்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன.
இதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தில் முக்கிய நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.