கஜுகம பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த விபத்து காரணமாக கொழும்பு கண்டி வீதியின் வாகன போக்குவரத்து கஜுகம பகுதியில் முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.