தன்னுடைய சிறு பிள்ளைகளை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவரை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மூன்றரை வயது குழந்தையை தூக்கி வந்து தரையில் அடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் தாய் வெளிநாட்டில் இருந்த போது தந்தை இந்த கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளை தற்போது அனாதை இல்லத்தில் தங்கியுள்ளார்.
தாம் கடுமையான நிதிப் பிரச்சினைகளை எதிர்கொள்வதால், இந்தக் குழந்தைகளுடன் வாழ சில உதவிகளை வழங்குமாறு குறித்த பெண் கோரியுள்ளார்.