பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான பிரேரணை
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சபைத் தலைவர் சுசில் பிரேம்ஜெயந்த் அவர்களால் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் ஏழாவது பிரிவின் கீழ், ஆணைக்குழுவின் தற்போதைய தலைவரும் உறுப்பினருமான ஜனக ரத்நாயக்கவை அந்த உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கான பிரேரணையே இவ்வாறு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.