பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நதாஷா எதிரிசிங்கவிற்கு
உதவிய குற்றச்சாட்டில் யூடியுபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
SL Vlog எனும் யூடியூப் சேனலை நடத்திச் செல்லும் புரூனே திவாகர எனும் நபரையே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (31) பிற்பகல் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் யூடியூப் சேனலை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுமார் 8 மணிநேர விசாரணையின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.