1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த துப்பாக்கிச் சூட்டில் மிரிசேன மீனவ கிராமத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், தாய் வீட்டுக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, ​​அவரது தாய் வீட்டின் முன் மறைந்திருந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

பிரிந்து சென்ற கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மெதிரிகிரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி