1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மேற்கு உகாண்டாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் குழு நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கோ எல்லைக்கு அருகே உள்ள பாடசாலைக்குள் இரவு நேரத்தில் புகுந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய கிளர்ச்சிக் குழு இந்தத் தாக்குதலை நடத்தியது.

அந்த பாடசாலையில் சுமார் 60 மாணவர்கள் தங்கி இருந்ததாகவும், மாணவிகள் உட்பட சிலர் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலின் பின்னர் கிளர்ச்சியாளர்களால் பாடசாலை கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி