1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.


இன்று (17) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார்.

ஐந்து பேர் கொண்ட குழுவொன்று உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த போது கால் வழுக்கி இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் 03ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சசங்க விக்கும் விதாரண என்ற 25 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி