மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேசத்தில் பணத்துக்காக கோழிச் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த 7 பேரை இன்று (17) மாலை கைது செய்துள்ளதாகவும் 6 சண்டை கோழிகள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து நாவலடி பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று மாலை 6 மணியளவில் கோழி சண்டை நடாத்தி வந்த பகுதியை சுற்றிவளைத்த பொலிசார் அங்கு கோழிச் சண்டையில் ஈடுபட்டிருந்த 6 பேருடன் கோழிச் சண்டையை பார்த்துக் கொண்ட ஒருவர் உட்பட 7 பேரை கைது செய்ததுடன் 6 கோழிகளையும் ஒரு தொகை பணத்தையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 26 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து நாவலடி பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று மாலை 6 மணியளவில் கோழி சண்டை நடாத்தி வந்த பகுதியை சுற்றிவளைத்த பொலிசார் அங்கு கோழிச் சண்டையில் ஈடுபட்டிருந்த 6 பேருடன் கோழிச் சண்டையை பார்த்துக் கொண்ட ஒருவர் உட்பட 7 பேரை கைது செய்ததுடன் 6 கோழிகளையும் ஒரு தொகை பணத்தையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 26 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-