மனித கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை மீகாஹதென்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி மாலை மீகாஹதென்ன, பெலவத்தை நகரிலுள்ள தனியார் மருத்துவ நிலையம் ஒன்றில் சிகிச்சை பெற வந்த நபரை கூாிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரகதுவ, பெலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 36 மற்றும் 40 வயதுடைய மீகாஹதென்ன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (19) மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.