1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள மவுசாக்கலை நீர்த்தேக்கத்தை அண்மித்த காணி ஒன்றின் ஒரு பகுதியை ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு நீண்டகால அடிப்படையிலான குத்தகைக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது

மேற்படி நிறுவனத்தினால் அதி சொகுசு வாய்ந்த ஹோட்டல் ஒன்று நிர்மாணிப்பதற்காகவே இந்தக் காணி குத்தகைக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதி அவர்களினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்தின் கப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட் எல்எல்சி நிறுவனமே இதனை நீண்ட கால குத்தகைக்கு பெற்றுக் கொள்ள உள்ளது.

முழுமையான வெளிநாட்டு முதலீடாகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதற்காக 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி