சூதாட்ட விளையாட்டுக்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் வரியை அறிவிடுதல், சூதாட்ட செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்
செயல்களைத் தடுத்தல், சூதாட்ட விளையாட்டுக்கள் மூலம் ஆட்களுக்கும் சமூகத்திற்கும் இடம்பெறுகின்ற தீயவிளைவுகளைக் குறைத்தல் போன்ற பணிகளுக்காக அனைத்து சூதாட்ட விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு தாக்கம் செலுத்துகின்ற ஏற்புடைய வகையில் சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை எனும் பெயரிலான ஒழுங்குறுத்துகை நிறுவனமொன்றை தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தல்; அதிகாரசபையை தாபிப்பதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.