1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசாங்கத்தின் நிதிப் பற்றிய குழுவினால் நேற்று (30) அங்கீகரிக்கப்பட்ட தேசிய கடன் மறுசீரமைப்பு யோசனை இன்று (01)

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “குழுவில் நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்திற்கும், இன்றைய நிகழ்ச்சி நிரலில் முன்வைக்கப்பட்ட திட்டங்களுக்கும் இடையே சிறிய முரண்பாடு உள்ளது. அனைத்து வார்த்தைகளும் ஒரே வடிவத்தில் இருக்க வேண்டும், ஆனால் அந்த வார்த்தைகள் ஒரே வடிவத்தில் இல்லை. நாங்கள் நேரடியாக குழுவில் ஒப்புக்கொண்டோம் மத்திய வங்கியின் ஆளுநரால் முன்வைக்கப்பட்டயோசனையுடன், இந்த முன்மொழிவு ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த முன்வைப்புதான் கடனை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது பற்றியதாகும். இந்த யோசனையில் அது இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி