பதினைந்து வயது பள்ளி மாணவி ஒருவர் கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவ்வப்போது கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு
ஆளானார்
குறித்த மாரவில பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் பொறுப்பதிகாரி ஒருவரை கைது செய்ய மாரவில தலைமையக பொலிஸார் பல விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்ய தேடப்படும் சந்தேகத்திற்குரிய தந்தை தலைமறைவாக உள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்ய தேடப்பட்டு வரும் இந்த சந்தேகத்திற்குரிய தந்தை நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிக்கை மாரவில நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், தந்தை நாட்டை விட்டுத் தப்பிச் சென்றால் அவரைக் கைது செய்யுமாறு உத்தரவும் பெறப்பட்டுள்ளதாக உயர்மட்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமியின் பெற்றோருக்கு இது தெரியவந்ததையடுத்து குழந்தையும் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் மாரவில தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.