வலஸ்முல்லை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்துவதற்கான வீடியோ ப்ரோன்கோஸ்கோப் மற்றும் இன்குபேஷன் இயந்திரம்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்
நீதியமைச்சரின் ஆலோசனைக்கு அமைய சட்டத்தரணி அஜித் பெரேராவினால் நேற்று (13) அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து குறித்த உபகரணங்கள் மற்றும் இயந்திரம் கையளிக்கப்பட்டது.
தனது பூர்வீக பிரதேசமான வலஸ்முல்லையுடன் வலுவான உறவைக் கொண்டுள்ள அமைச்சர், அப்பகுதி மக்களிடம் தனது அர்ப்பணிப்பை பல தடவைகள் நிரூபித்துள்ளார்.
அங்குள்ள சுகாதார வசதிகளை மேம்படுத்தி அவர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இந்த இயந்திரத்தின் உதவியுடன், வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையானது அதிநவீன தொழில்நுட்பத்தின் ஊடாக நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதுடன், வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தரத்தையும் உயர்த்த முடியும்.
வலஸ்முல்லை ஆதார வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் சபை, தாங்கள் சேவை செய்யும் மக்களுக்கு சிறந்த தரமான சுகாதார சேவையை வழங்குவதன் மூலம் அவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றுவதில் அமைச்சரின் உறுதியான அர்ப்பணிப்பு என்று கூறுகிறது.