1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சர்வதேச நாடு ஒன்றின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை ரணில்

விக்கிரமசிங்கவின் நிர்வாகம் மறுத்துள்ளது.

இரு நாட்களுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு சவால் விடும் வகையில், கனடாவின் ஆளும் கட்சி உறுப்பினரான கேரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் கனடா பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ஆனந்தசங்கரி, நீதி அமைச்சர் மற்றும்
கனடாவின் சட்டமா அதிபர் ஆகியோரின்
பாராளுமன்ற செயலாளராக உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள்
மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இரண்டு சகோதரர்கள் கனடாவுக்குள் நுழைய ஜனவரி 2023 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வடக்குப் போரின் போது தமிழ் இனப்படுகொலை நடந்ததாக கனடா அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

எம்.பி ஆனந்தசங்கரியினால் கனடா பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு 2022 மே மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம், முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நாளாகக் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கனேடிய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நாட்டின் விசேட பொருளாதார நடவடிக்கைகள் ஒழுங்குமுறைகளை திருத்தியதன் மூலம் தடைகளை விதித்திருந்தது.

ஆயுத மோதல்கள், பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் மனித உரிமை மீறல்களால் இலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜொலி இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இலங்கை தொடர்பாக, குறிப்பாக மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் போர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தாம் மேற்கொள்ளும் பணிகளுக்காகவே விசா மறுக்கப்பட்டதாக ஆனந்தசங்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Free speech apparently is allowed when it suits the government. @MarioArul Burning effigy's will not correct the failures of consecutive GOSL. Regrettably, Sri Lanka has refused my Visa out right. It's reprisal for the work we do. We will not be silenced. https://t.co/dgU5JdCqgm

— Gary Anandasangaree (@gary_srp) July 12, 2023

"சுதந்திரமான பேச்சு, அரசாங்கத்திற்குப் பொருத்தமாக இருக்கும்போது அது அனுமதிக்கப்படுகிறது. கொடும்பாவிகளை எரிப்பதால், தொடர்ச்சியான இலங்கை அரசாங்கத்தின் தோல்விகளை சரி செய்ய முடியாது. வருந்தத்தக்க வகையில், இலங்கை எனது விசாவை மறுத்துவிட்டது. இது நாம் செய்யும் பணிக்கான பழிவாங்கலாகும். எனவே நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

இதேவேளை, கேரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னணி தமிழ் அரசியல்வாதியான வி.ஆனந்தசங்கரியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி