மக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படாதவாறு சுகாதார அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் கிடைக்கும் அனைத்து மருந்துகள் தொடர்பில் வௌிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.