1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த 716 இலக்க ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை மற்றும் எகொடஉயன ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரயில் பாதையை கவனக்குறைவாக கடக்கும் போதே குறித்த பெண் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 60 வயது மதிக்கத்தக்க பெண் எனவும் அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி