மத வழிபாட்டுத் தலங்களின் கீழ் உள்ள சொத்துகள் குறித்த தகவல்களைப் பெற அரசு முடிவு செய்துள்ளது.
மத வழிபாட்டுத் தலங்களின் கீழ் உள்ள சொத்துக்கள் இதுவரையில் பதிவு செய்யப்படாததன் காரணமாகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்வதுடன், அது தொடர்பான தகவல் சேகரிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஒரு கிராம சபைக்கு எத்தனை வழிபாட்டுத் தலங்கள் இருக்க வேண்டும் என்பதற்கான அளவுகோல்களை தயாரிக்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.