சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் தமது பதவிகளை விட்டு விலக வேண்டும் என தெரிவித்து இன்று (18) காலை அமைச்சுக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
அத்துடன், நேற்று பிற்பகல் கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில், சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இந்த வாரம் பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், ஒரு சிலரின் எதிர்ப்பினால் தாம் பதவியை இராஜினாமா செய்யத் தயாரில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.