ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிரேஸ்ட பேராசிரியர் பத்மலால் எம் மானேகே நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்று வருட காலத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த நியமனத்திற்கு முன்னர், பேராசிரியர் பத்மலால் எம் மானேகே பட்டதாரி கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாக பணியாற்றினார்.