1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சுகயீன விடுமுறையை அறிவித்து அரச நில அளவை அதிகாரிகள் இன்று (26) தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.



காணி அமைச்சரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க நில அளவையாளர்கள் சங்கத்தின் தலைவர் துமிந்த உந்துகொட தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “அளவீடு திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள பௌதீக மனித வளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கோரியுள்ளோம், நில அளவை அளவையாளர்கள் சார்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றுக்கான தீர்வுகளை வழங்குமாறு கோருகின்றோம். இவ்வேளையில் , நாட்டில் பணமில்லை எனவும், நில அளவைத் திணைக்களத்தின் நில அளவைப் பணியை தனியாருக்கு வழங்கி பல முறைகேடுகள் நடைபெறுகின்றன. எனவே இன்று சுகயீன விடுமுறையை அறிவித்தோம். இது பற்றி ஒரு வாரத்திற்கு முன்பு அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளாருக்கும் அறிவித்தோம். ஆனால் இதுவரை பதில் இல்லை. இதற்கும் பதில் இல்லை என்றால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் சுகயீன விடுமுறையை அறிவித்து கொழும்பில் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி