போலி விசாவுடன் பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியன குறித்த பெண் தொடர்பில் சந்தேகம் அடைந்து விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
அதன்போது, குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குறித்த பெண்ணைக் கைது செய்ததுடன், குறித்த பெண்ணைத் தவிர, குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணுக்கு போலி விசாவை பெற்றுக்கொடுக்க இந்த அதிகாரி உதவியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று (28) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், குறித்த பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒகஸ்ட் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.