1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ரிட்ஜ்வே மருத்துவமனையில் ஹம்தி ஃபஸ்லிம் என்ற மூன்று வயது சிறுமியின் மரணம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின்

அறிக்கையில் முரண்பாடுகளும் தெளிவின்மையும் காணப்படுவதால் கிடைக்கப்பெற்ற அனைத்து அறிக்கைகளின் அடிப்படையிலும் விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நேற்று பொரளை பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மருத்துவ நிபுணர் டாக்டர் வை.எல்.எம். யூசுப்பின் சாட்சியத்தின்படி, குழந்தைக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதாகவும், அறுவை சிகிச்சையின் போது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டதாகவும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் பணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியதாக டாக்டர் யூசுப் தனது விளக்கத்தின் போது நீதவானிடம் தெரிவித்தார்.

குழந்தையின் இரண்டு சிறுநீரகங்கள் இருப்பதாகவும், வலது சிறுநீரகம் சாதாரணமாக செயல்படுவதாகவும் அறிக்கைகள் உறுதிப்படுத்தின.

சுகாதாரத்துறையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனக்குறைவால் ஹம்தி பஸ்லிம் எனும் மூன்றரை வயதுடைய குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த சிறுமியின் கடைசி தருணங்களை நன்கு அறிந்தும் வைத்தியாசாலையில் இருந்த தாதிமார் மற்றும் வைத்தியர்கள் அவருக்கான சிகிச்சையை உரிய முறையில் வழங்கவில்லை என லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலில் பெற்றோர்,

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஹம்தி பஸ்லிம் எனும் மூன்றரை வயதுடைய குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவருடைய ஒரு சிறுநீரகத்தை மாத்திரம் அகற்ற வேண்டுமென வைத்தியர்கள் வலியிறுத்தியதையடுத்து, குறித்த குழந்தைக்கு கடந்த வருடம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், சத்திர சிகிச்சையின் போது வைத்தியர்கள் கவனயின்மையால் குழந்தையின் இரு சிறுநீரகங்களையும் அகற்றியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனை சத்திர சிகிச்சையின் பின்னர் வைத்தியர்கள் அறிந்து கொண்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தரப்பில் நடந்த தவறை அவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமது குழந்தைக்கு நான்கு மாதங்களில் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்வதாக வைத்தியர்கள் உறுதியளித்திருந்தாலும், அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஹம்தி பஸ்லிமுக்கு சுமார் ஏழு மாத காலத்துக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும், சரியான சிகிச்சைகள் வழங்கப்படாத காரணத்தால் அவர் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம், வைத்தியர்களின் கவனக்குறைவால் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட தமது குழந்தையின் நிலை குறித்து அறிந்திருந்தாலும், இது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என ஹம்தி பஸ்லிமின் பெற்றோர் மேலும் கூறியுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி