1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில்

விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 10 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த பிணை உத்தரவை வழங்கிய நீதிமன்றம், சந்தேகநபர்கள் அரச நிறுவனத்திற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்துள்ளது.

நேற்று (08) காலை இலங்கை மத்திய வங்கியின் வளாகத்துக்குள் நுழைந்த லீசிங் மற்றும் கடனை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி