1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்

27 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 39 இலங்கையர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அபிவிருத்தித் திட்டமொன்றில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

பணி நேரத்தை முடித்துக் கொண்ட இலங்கையர் குழு, பேருந்து ஒன்றில் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​யூப்சுல்தான் பகுதியில் பேருந்து கவிழ்ந்துள்ளது.

சுரங்கப்பாதையில் பயணித்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியில் இருந்து விலகி சுமார் 6 மீற்றர் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சாரதியுடன் 39 இலங்கையர்கள் பேருந்தினுள் இருந்ததாகவும் அவர்களில் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த இலங்கையர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதி ஒருவரை இஸ்தான்புல் நகருக்கு அனுப்பவுள்ளதாக துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி