1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் சுற்று போட்டியின் போது டுபாயில் இருந்து  தொலைபேசியில் அழைத்து  இரண்டு வீரர்களை ஆட்ட நிர்ணயத்திற்கு துாண்டியமை தொடர்பில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவிற்கு அறிவித்துள்ளது. .

இதன்படி, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி