அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகள் நாளைய தினம் (30) (பௌர்ணமி) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'அஸ்வெசும' பயனாளிகள் தமது கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு வங்கிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.