முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வானது இரண்டாவது நாளாக நேற்றையதினம்(07) முல்லைத்தீவு நீதவான்
நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது.
அகழ்வு பணியின்போது மேலும் சில மனித எலும்புக்கூடுகள் இனங்காணப்பட்ட்டது.
துப்பாக்கிச் சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு சில உலோகத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அகழ்வுப் பணி இன்று (08) முன்னெடுக்கப்படவுள்ளது.