வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த அணு ஆயுத தடை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பிரேரணைக்கு
அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
2021 டிசம்பர் 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதன்படி, இம்மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்துடன் இணைந்து நடைபெறவுள்ள விழாவில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.