அரச நிறுவனங்களுக்காக கொழும்பு பங்குச் சந்தையில் தனியாக பட்டியலிடுவதற்கான காட்சி பலகை மற்றும் ஒழுங்குமுறைகளை
உருவாக்குவதற்கு இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையில் அரச நிறுவனங்களின் பங்குகளை பட்டியலிடுவதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.