வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 56 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தீயினால் மேலும் 37 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த நாட்டின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.