பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (ETCA) மீண்டும் ஆரம்பிப்பதற்கான கலந்தரையாடல் ஒன்று
நடைபெற்றுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவின் முக்கிய பேச்சுவார்த்தையாளர்கள் ஒன்லைன் ஊடாக கடந்த 19ஆம் திகதி இது குறித்த சந்திப்பில் இணைந்துள்ளனர்.
இது முன்னைய 11 சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியைக் குறிக்கிறது.