1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (23) பிற்பகல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் 40 முதல் 45 வயதுடையவர் எனவும் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இறுதியாக நீல நிற டெனிம் காற்சட்டையை அணிந்திருந்தாக குறிப்பிடப்படுகிறது.

தற்போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி