கொழும்பு துறைமுக நகரம் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை போன்றவற்றுக்கு முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்காக
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் தலைமையிலான முதலீட்டாளர்களுடனான சந்திப்பு ஒன்று, டுபாய் மற்றும் அபுதாபி நாடுகளில் இம்மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.
இதற்கு விசேட ஒத்துழைப்பை வழங்க உள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனுக்கு இலங்கை ரூபாய் படி 697,00000 ரூபாய் (2,10000 அமெரிக்க டொலர்) வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான முழு கொடுப்பனவும் கொழும்பு துறைமுக நகரத்தை நிர்வகிக்கும் செக் போர்ட் சிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினாலேயே வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.