மயிலத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில்
பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 11ஆவது நாளாகவும் இடம்பெற்றது.
வீதி ஒரங்களில், கொட்டும் மழையிலும் வெயிலிலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தமது கோரிக்கையை முன்வைத்து அறவழிப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
அவர்களின் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பங்குபற்றினார்.
ஜனாதிபதியின் விஜயத்தின் போது பாரிய அகிம்சை வழிப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள இதன்போது தீர்மானிக்கப்பட்டது.